Search This Blog

Saturday, April 18, 2009

பொறுத்துக்கொள்வோம் !!!!!

நடிக்க தெரியாதவரும் நடிகர் ஆவார்கள்
வங்கி பணங்கள் எல்லாம் வாக்கு பெட்டியை
நிரப்பும் தலைவரின் வருகையால் தார் சாலைகள் முளைக்கும்

காவேரி தண்ணீரும் தவறாமல் வரும்
தலைவர்களின் பேச்சில்
மக்கள் கண்ணீரும் துடைக்கப்படும்
சில தலைவர்களின் பேச்சில்

இலவசங்கள் எல்லாம் இலவச வாக்குறுதியாக வலம் வரும்
உரிமைகள் கூட பிச்சையாக வழங்கப்படும்
அதையும் வாங்கிக் கொண்டு ஆள் காட்டி விரலில் வைத்த மை
சரி இல்லை என்று சிரித்து பேசும் சிறப்பானவர்களையும் காணலாம்.

சிலையான தலைவர்கள் மாலைகளைச் சுமப்பார்கள்
சித்திரங்கள் எல்லாம் சுவர்களை மறைக்கும்
விலை மகள் எல்லாம் விற்பனை ஆவார்கள்
டாஸ்மார்க் கடை மேசையும் தொண்டனின் வயிறும்
ஒரு மாதம் நிரம்பி வளியும்.

தினம் ஒரு தொகுதி என்று தொலைக்காட்சிகள் தொல்லை கொடுக்கும்
வாழ்க கோசங்களும் வாழ்த்து போஸ்டர்களும் வலம் வரும்
சில மேடைகளில் வாக்குறுதிகள் வீசப்படும்
சில மேடைகளில் செருப்பு வீசப்படும்

பல மேடைகளில் மத ஒற்றுமைக்கு மரியாதைக் கூடும்
சில மேடைகளில் ராமரும் பாபரும் வம்புக்கு வருவார்கள்
இந்தியாவின் நாளைய ஆணி வேர் நான்தான் என்று
நேற்றைய காளான்கள் நெஞ்சை நிமிர்த்தும்.

என்னை போன்றவர்களின் சில தத்துவ எழுத்துகளும் தவறாமல் வரும்
இந்த கொடுமைகள் எல்லாம் தேர்தல் காலங்களில் மட்டும் தானே வரும் பொறுத்துக்கொள்வோம் !!!!!

1 comment: